கீதங்களும் கீர்த்தனைகளும் 83
வர வேணும், என தரசே,
மனுவேல், இஸ்ரவேல் சிரசே.
அருணோ தயம் ஒளிர் பிரகாசா,
அசரீரி ஒரே சரு வேசா! - வர
1. வேதா, கருணா கரா, மெய்யான
பரா பரா,
ஆதார நிராதரா, அன்பான சகோ தரா,
தாதாவும் தாய் சகலமும் நீயே;
நாதா, உன் தாபரம் நல்குவாயே. - வர
2. படியோர் பவ மோசனா,
பரலோக சிம்மாசனா,
முடியா தருள் போசனா,
முதன் மா மறை வாசனா,
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்,
இமையவர் அடி தொழு
மேன்மையின் எந்தாய், - வர
3. வானோர் தொழும் நாதனே,
மறையாகம போதனே,
கானாவின் அதீதனே கலிலேய வினோதனே,
ஞானாகரமே, நடு நிலை யோவா,
நண்பா, உனத நன்மையின்
மகா தேவா! - வர
Comments
Post a Comment