கீதங்களும் கீர்த்தனைகளும் 84
1. சாலேமின் ராசா,
சங்கையின் ராசா, ஸ்வாமி
வாருமேன், ஸ்வாமி,
வாருமேன் - இந்தத்
தாரணி மீதினில் ஆளுகை செய்திடச்
சடுதி வாருமேன் - சா
2. சீக்கிரம் வருவோமென்று
ரைத்துப்போன
செல்வக்குமாரனே, - இந்தச்
சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற
செய்திகேளீரோ? - சா
3. எட்டி எட்டி உம்மை
அண்ணாந்து பார்த்துக்
கண்பூத்துப் போகுதே; - நீர்
சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே, - சா
4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை
நாடித்தேடுதே; - இந்த
நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள்
தேடிவாடுதே. - சா
5. சாட்சியாகச் சுபவிசேஷம்
தாரணிமேவுதே; - உந்தஞ்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே - சா
Comments
Post a Comment