கீதங்களும் கீர்த்தனைகளும் 86
எனது கர்த்தரின் ராஜரீக நாள்
எப்போ வருகுமோ?
ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
எப்போ பெருகுமோ?
மனிதசுதனின் அடையாளம் விண்ணில்
காணும், என்றாரே,
வல்லமையோடு மகிமையாய்த்தோன்றி,
வருவேன் என்றாரே - என
1. தேவ தூதரின் கடைசி எக்காளம்
தொனி முழங்கவே;
ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர்
உயிர்த்தெழும்பவே;
ஜீவனுள்ளோரும் அவருடன் மறு ரூபமாகவே;
ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக்
கெழுந்துபோகவே. - எனது
2. தூதர் எக்காளத்தொனியில் என்னிடம்
சேர்ப்பேன் என்றாரே;
சோதனைக் காலந்தனில் தப்பவுன்னைக்
காப்பேன் என்றாரே;
பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே;
பாவ மனுஷன் தோன்றி நாசமாய்ப்
போவான் என்றாரே. - எனது
3. ஜாதிகட்குக் கொடியாய் ஈசாயின்
வேரன் றேறுவார்;
சகலரும் அவர் கொடியின் கீழ்
வந்து பணிந்து சூழுவார்;
நீதியாய்த் தானே மேசியா
எங்கும் ஆளுகை செய்வார்;
நித்தம் பிரபுக்களும் நியாயமாய்த்
துரைத்தனம் செய்வார். - எனது
4. எருசலேமி லிருந்து ஜீவ நதிகள் ஓடுமே;
ஏழைகள் மன மகிழ்ந்து கர்த்தரை
ஏத்திப் பாடுமே;
வருஷமாயிரம் அளவும் பூமியில்
பலன்கள் நீடுமே;
வானராச்சிய சேனைகள் யாவும்
வந்து கூடுமே. - எனது
5. சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும்
ஓடிப் போகுமே;
சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும் வந்து
சார்ந்து பிடிக்குமே;
நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின்
வாய் துதிக்குமே;
நித்திய ஜீவனைப் பெற என்றன்
மனம் துடிக்குமே. - எனது
Comments
Post a Comment