86. Enadhu Kartharin Rajariga Naal - எனது கர்த்தரின் ராஜரீக நாள் - (கீகீ 86)

கீதங்களும் கீர்த்தனைகளும் 86

 
 எனது கர்த்தரின் ராஜரீக நாள்
 எப்போ வருகுமோ?
 ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
 எப்போ பெருகுமோ?

 மனிதசுதனின் அடையாளம் விண்ணில்
  காணும், என்றாரே,
 வல்லமையோடு மகிமையாய்த்தோன்றி,
  வருவேன் என்றாரே - என

1. தேவ தூதரின் கடைசி எக்காளம்
   தொனி முழங்கவே;
  ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர்
   உயிர்த்தெழும்பவே;
  ஜீவனுள்ளோரும் அவருடன் மறு ரூபமாகவே;
  ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக்
   கெழுந்துபோகவே. - எனது

2. தூதர் எக்காளத்தொனியில் என்னிடம்
   சேர்ப்பேன் என்றாரே;
  சோதனைக் காலந்தனில் தப்பவுன்னைக்
   காப்பேன் என்றாரே;
  பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே;
  பாவ மனுஷன் தோன்றி நாசமாய்ப்
   போவான் என்றாரே. - எனது

3. ஜாதிகட்குக் கொடியாய் ஈசாயின்
   வேரன் றேறுவார்;
  சகலரும் அவர் கொடியின் கீழ்
   வந்து பணிந்து சூழுவார்;
  நீதியாய்த் தானே மேசியா
   எங்கும் ஆளுகை செய்வார்;
  நித்தம் பிரபுக்களும் நியாயமாய்த்
   துரைத்தனம் செய்வார்.    - எனது

4. எருசலேமி லிருந்து ஜீவ நதிகள் ஓடுமே;
  ஏழைகள் மன மகிழ்ந்து கர்த்தரை
   ஏத்திப் பாடுமே;
  வருஷமாயிரம் அளவும் பூமியில்
   பலன்கள் நீடுமே;
  வானராச்சிய சேனைகள் யாவும்
   வந்து கூடுமே. - எனது

5. சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும்
   ஓடிப் போகுமே;
  சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும் வந்து
   சார்ந்து பிடிக்குமே;
  நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின்
   வாய் துதிக்குமே;
  நித்திய ஜீவனைப் பெற என்றன்
   மனம் துடிக்குமே. - எனது

 

#தமிழ்கிறிஸ்தவபாடல்கள் #கீதங்களும்கீர்த்தனைகளும் #கீர்த்தனை #பாமாலை #தமிழ்கிறிஸ்தவவாசகங்கள் #geethangalumkeerthanaigalum #keerthanai #pamalai #tamilchristiansongs #tamilchrsitansongslyrics #tamilsonglyrics #tamilsong #biblesongs #jesussongs #christiansongstamil



Comments