கீதங்களும் கீர்த்தனைகளும் 87
வையகந்தன்னை நடுத்தீர்க்க இயேசு
வல்லவர் வருகிறார் திருமறைக்கேற்க.
பொய்யுலகோர்களின் கண்களும்
பார்க்க,
பொற்பதிதனிற் பரன் சேயரைச்
சேர்க்க. - வைய
1. வானங்கள் மடமடப்போ
டொழிந்திடவே,
மகிதலம் அதிர்ச்சியாய்த்
தானடுங்கிடவே,
பானுவும் மதி யுடு அனைத்து
மங்கிடவே,
பஞ்சபூதியங்களுந் தானழிந்திடவே,
- வைய
2. முக்கிய தூதனெக்காளமே
தொனிக்க,
முன் மரித்தோரெலாந்
தாமெழுந்திருக்க,
அக்கணமுயிருள்ளோர் மறு
உருத்தரிக்க,
ஆண்டவர் வருகிறார்,
பக்தர்கள் களிக்க, - வைய
3. யாவரின் சிந்தை செய்கையும்
வெளிப்படற்கு
இரண்டு புத்தகங்களுந்
திறந்தவரவர்க்குப்
பூவுலகினிலவர் நடந்து வந்ததற்குப்
புண்ணியனளவுடன் பலனளிப்பதற்கு,
- வைய
4. அடைக்கலன் யேசுவை அறிந்தவர்
நாமம்
அழிந்திடாதவர்களின் வாழ்வது ஷேமம்;
படைத்திடுவாயிந்தக் கணமுனை, ஷாமம்
பற்றிடக் கூடுமே திடுக்கெனவே,
நம் - வைய
#தமிழ்கிறிஸ்தவபாடல்கள் #கீதங்களும்கீர்த்தனைகளும் #கீர்த்தனை #பாமாலை #தமிழ்கிறிஸ்தவவாசகங்கள் #geethangalumkeerthanaigalum #keerthanai #pamalai #tamilchristiansongs #tamilchrsitansongslyrics #tamilsonglyrics #tamilsong #biblesongs #jesussongs #christiansongstamil
Comments
Post a Comment