87. Vaiyagandhannai Nadutheerka -  வையகந்தன்னை நடுத்தீர்க்க - (கீகீ 87)

கீதங்களும் கீர்த்தனைகளும் 87

 
 வையகந்தன்னை நடுத்தீர்க்க இயேசு
 வல்லவர் வருகிறார் திருமறைக்கேற்க.

 பொய்யுலகோர்களின் கண்களும்
  பார்க்க,
 பொற்பதிதனிற் பரன் சேயரைச்
  சேர்க்க. - வைய

1. வானங்கள் மடமடப்போ
   டொழிந்திடவே,
  மகிதலம் அதிர்ச்சியாய்த்
   தானடுங்கிடவே,
  பானுவும் மதி யுடு அனைத்து
   மங்கிடவே,
  பஞ்சபூதியங்களுந் தானழிந்திடவே,
   - வைய

2. முக்கிய தூதனெக்காளமே
   தொனிக்க,
  முன் மரித்தோரெலாந்
   தாமெழுந்திருக்க,
  அக்கணமுயிருள்ளோர் மறு
   உருத்தரிக்க,
  ஆண்டவர் வருகிறார்,
  பக்தர்கள் களிக்க, - வைய

3. யாவரின் சிந்தை செய்கையும்
   வெளிப்படற்கு
  இரண்டு புத்தகங்களுந்
   திறந்தவரவர்க்குப்
  பூவுலகினிலவர் நடந்து வந்ததற்குப்
  புண்ணியனளவுடன் பலனளிப்பதற்கு,
   - வைய

4. அடைக்கலன் யேசுவை அறிந்தவர்
   நாமம்
  அழிந்திடாதவர்களின் வாழ்வது ஷேமம்;
  படைத்திடுவாயிந்தக் கணமுனை, ஷாமம்
  பற்றிடக் கூடுமே திடுக்கெனவே,
  நம் - வைய

 

#தமிழ்கிறிஸ்தவபாடல்கள் #கீதங்களும்கீர்த்தனைகளும் #கீர்த்தனை #பாமாலை #தமிழ்கிறிஸ்தவவாசகங்கள் #geethangalumkeerthanaigalum #keerthanai #pamalai #tamilchristiansongs #tamilchrsitansongslyrics #tamilsonglyrics #tamilsong #biblesongs #jesussongs #christiansongstamil


 

Comments