கீதங்களும் கீர்த்தனைகளும் 89
1. மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க
வல்ல பராபரன் வந்தார்,
வந்தார். - பாரில்
2. இந்நிலம் புரக்க, உன்னதத் திருந்தே
ஏகபராபரன் வந்தார்,
வந்தார். - பாரில்
3 வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர்,
மகிமைப் பராபரன் வந்தார்,
வந்தார். - பாரில்
4. நித்திய பிதாவின் நேய குமாரன்
நேமி அனைத்தும் வாழ வந்தார்,
வந்தார். - பாரில்
5. மெய்யான தேவன், மெய்யான மனுடன்,
மேசியா, ஏசையா வந்தார்,
வந்தார். - பாரில்
6. தீவினை நாசர், பாவிகள் நேசர்,
தேவ கிறிஸ்தையா வந்தார்,
வந்தார். - பாரில்
7. ஜெய அனுகூலர், திவ்விய பாலர்,
திரு மனுவேலனே வந்தார்,
வந்தார். - பாரில்
Comments
Post a Comment