90. Arulin Oliyai Kandar - அருளின் ஒளியைக் கண்டார் - (கீகீ 90)

கீதங்களும் கீர்த்தனைகளும் 90

 
1. அருளின் ஒளியைக் கண்டார்
    இருளின் மாந்தரே;
  மருள் மரண மாந்தரில்
    திரு ஒளி வீச.

2. ஜாதிகளைத் திரளாக்கி
    நீதி மகிழ்ச்சியால்
  கோதில் அறுப்பில் மகிழ
    ஜோதியாய்த் தோன்றினார்.

3. கர்த்தன், பிறந்த பாலகன்,
    கர்த்தத்துவமுள்ளோன்;
  சுத்த அவரின் நாமமே
    மெத்த அதிசயம்.

4. ஆலோசனையின் கர்த்தனே,
    சாலவே வல்லோனே,
  பூலோக சமாதானமே
    மேலோக தந்தையே.

5. தாவீதின் சிங்காசனத்தை
    மேவி நிலைகொள்ள
  கூவி நியாயம் நீதியால்
    ஏவி பலம் செய்வார்.

 

#தமிழ்கிறிஸ்தவபாடல்கள் #கீதங்களும்கீர்த்தனைகளும் #கீர்த்தனை #பாமாலை #தமிழ்கிறிஸ்தவவாசகங்கள் #geethangalumkeerthanaigalum #keerthanai #pamalai #tamilchristiansongs #tamilchrsitansongslyrics #tamilsonglyrics #tamilsong #biblesongs #jesussongs #christiansongstamil



Comments