94. Oh Bethlaheme Sitroore - ஓ பெத்லெகேமே சிற்றூரே - (கீகீ 94)

கீதங்களும் கீர்த்தனைகளும் 94

 
1. ஓ பெத்லெகேமே சிற்றூரே,
    என்னே உன் அமைதி!
  அயர்ந்தே நித்திரை செய்கையில்
    ஊர்ந்திடும் வான் வெள்ளி,
  விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே
    உன் வீதியில் இன்றே;
  நல்லோர் நாட்டம்
   பொல்லார் கோட்டம்
    உன் பாலன் இயேசுவே.

2. கூறும், ஓ விடி வெள்ளிகான்!
    இம்மைந்தன் ஜன்மமே;
  விண் வேந்தர்க்கு மகிமையே,
    பாரில் அமைதியாம்;
  மா திவ்விய பாலன் தோன்றினார்
    மண் மாந்தர் தூக்கத்தில்,
  விழித்திருக்க தூதரும்
    அன்போடு வானத்தில்.

3. அமைதியாய் அமைதியாய்
    விண் ஈவு தோன்றினார்;
  மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும்
    அமைதியாய் ஈவார்;
  கேளாதே அவர் வருகை
    இப்பாவ லோகத்தில்;
  மெய் பக்தர் ஏற்பார் ஸ்வாமியை
    தம் சாந்த ஆன்மாவில்.

4. வேண்ட நற் சிறு பாலரும்
    இத் தூய பாலனை,
  அழைக்க ஏழை மாந்தரும்
    இக்கன்னி மைந்தனை,
  விஸ்வாசமும் நம் பாசமும்
    வரவைப் பார்க்கவே,
  இராவை நீக்கித் தோன்றுவார்
    இம்மாட்சி பாலனே.

5. பெத்லெகேம் தூய பாலனே,
    இறங்கி வருவீர்;
  ஜனிப்பீர் எங்களில் இன்றும்
    எம் பாவம் நீக்குவீர்;
  நற்செய்தி இவ்விழாதன்னில்
    இசைப்பார் தூதரே;
  ஆ வாரும், வந்து தங்கிடும்
    இம்மானுவேலரே.

 

#தமிழ்கிறிஸ்தவபாடல்கள் #கீதங்களும்கீர்த்தனைகளும் #கீர்த்தனை #பாமாலை #தமிழ்கிறிஸ்தவவாசகங்கள் #geethangalumkeerthanaigalum #keerthanai #pamalai #tamilchristiansongs #tamilchrsitansongslyrics #tamilsonglyrics #tamilsong #biblesongs #jesussongs #christiansongstamil



Comments