கீதங்களும் கீர்த்தனைகளும் 95
1. பக்தரே, வாரும்
ஆசை ஆவலோடும்;
நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை:
வானோரின் ராஜன்
கிறிஸ்து பிறந்தாரே!
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
இயேசுவை.
2. தேவாதி தேவா,
ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர் வெறுத்திலீர்.
தெய்வ குமாரன்,
ஒப்பில்லாத மைந்தன்;
3. மேலோகத்தாரே,
மா கெம்பீரத்தோடு,
ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்;
~விண்ணில் கர்த்தா நீர்
மா மகிமை ஏற்பீர்!~
4. இயேசுவே வாழ்க!
இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்
தந்தையின் வார்த்தை
மாம்சம் ஆனார் பாரும்.
Comments
Post a Comment